உள்ளூர் முக்கிய செய்திகள்

கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி

  • July 27, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் […]

உள்ளூர்

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  • July 25, 2025
  • 0 Comments

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு […]

உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

  • July 23, 2025
  • 0 Comments

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

  • July 22, 2025
  • 0 Comments

வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத் துறையினர் மற்றும் வவுனியா குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனையை நடத்தியுள்ளனர். இதற்கமைய, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • July 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

  • July 20, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில் பணியாற்றி வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘விஸ்டம் ஓக்’ (றுளைனழஅ ழுயம) எனும் நிறுவனம் 2016இல் நிறுவப்பட்டதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகித்து வருகின்றதாக சமூக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அர்ஜுன் மகேந்திரன், […]

உள்ளூர்

வவுனியாவில் ஒருவரின் மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பில் மேலும் 5 பேர் கைது

  • July 19, 2025
  • 0 Comments

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில், மேலும் ஐந்து பேர் நேற்று (18-07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அன்றைய இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மரணத்திற்கு பொலிசார் காரணம் எனக் கூறிய குழுவினர் குழப்பத்தை ஏற்படுத்தி, பொலிசாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைக்காக அங்கு சென்ற பொலிசாரை அப்பகுதியிலிருந்த மக்கள் தாக்கியதுடன், அந்த சம்பவத்தில் […]

உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

அரசு வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை – சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தீவிர பற்றாக்குறை நிலவி வருவதால், நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, மருந்துப் பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவுக்கான முறைகள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். வைத்தியர்கள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை சேவைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் பேசுவதற்கு இலங்கை குழு 18 ம் திகதி பயணமாகின்றது

  • July 15, 2025
  • 0 Comments

இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 30 வீத பரஸ்பர கட்டணத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட, உயர்மட்ட இலங்கை அரசுக்குழுவொன்று ஜூலை 18ஆம் திகதி அமெரிக்கா செல்லும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வெளியான அறிவிப்புக்குப் பின்னர், ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய கட்டணத்திற்கு முன்பான நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 44 வீத கட்டணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூலை 12ஆம் […]