உள்ளூர்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

  • August 30, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

  • August 23, 2025
  • 0 Comments

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

  • August 20, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதே விடயம் தொடர்பில் முன்னாள் […]

உள்ளூர்

கொழும்பில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர் தானியங்கி துப்பாக்கியுடன் கைது

  • August 16, 2025
  • 0 Comments

கொழும்பில் பாதாள உலக தாக்குதலை மேற்கொள்ளவிருந்த சந்தேக நபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபர் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை சார்ஜென்ட் மேஜர் ஒருவர் ஆவார். அவரிடம் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன. சந்தேக நபர் மாலபேயில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைதான நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு […]

உள்ளூர்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • August 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

உள்ளூர்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • July 30, 2025
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர். அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் […]

உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

  • July 23, 2025
  • 0 Comments

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.