உள்ளூர் முக்கிய செய்திகள்

CEB-க்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் – நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

  • September 19, 2025
  • 0 Comments

இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது வகித்து வரும் இடைக்காலத் தலைவருக்கு பதிலாக நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ECA பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிகா, ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: ‘ஊநுடீ ஏற்கனவே நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், மறுசீரமைப்பு முழுமை பெறும் வரை அது மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

  • September 18, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் […]

உள்ளூர்

என்.பி.பி. அரசின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஊழல் ஊடாக சொத்து சேகரிப்பு?

  • September 18, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசின் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மற்றும் வீணாக்கத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற சமூக அமைப்பின் தலைவர் கமந்த துஷாரா, இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். அவர், 2006ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்ட எண் 5ன் கீழ் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். முறைப்பாடு செய்யப்படடுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்: சுகாதாரம், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ்தேசிய கட்சிகளும் சிங்கள கட்சிகளும் சுவிஸ்லாந்தில் பேச்சுவார்த்தை

  • September 17, 2025
  • 0 Comments

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தப்பட்டது. இதே கலந்துரையாடல் இன்று புதன்கிழமை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 19 உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்றனர். இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அடங்கினர். சுவிஸ்லாந்தில் நடைபெறும் கலந்துரையாடல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

CEB யூனியன் இன்று மற்றும் நாளையும் போராட்டம்

  • September 17, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், அரசு CEB ஐ நான்கு தனி நிறுவனங்களாக பிரிக்க முடிவெடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. கடந்த திங்கள் (15) முதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்டம் முடிந்தது, இப்போது இரண்டாம் கட்டம் இன்று (17) மற்றும் நாளை (18) நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களில் தொழில்சங்க உறுப்பினர்கள் வேலை செய்யாமல், குறிப்பாக சில உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் மற்றும் கேள்வி அறிவித்தல் தொடர்பான வேலைகளில் பங்கேற்காமல் இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் […]

உள்ளூர்

சீனாவும் பாகிஸ்தானும் கொண்டுவந்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் நிராகரித்தது

  • September 17, 2025
  • 0 Comments

ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

  • September 14, 2025
  • 0 Comments

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று (14-09-2025) பல மாகாணங்களில் மழை பெய்யும்

  • September 14, 2025
  • 0 Comments

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பொழிவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • September 14, 2025
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

  • September 13, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கும் நிதி அமைப்பின் மீதான நம்பிக்கை, அவர்கள் கருதும் அபாய மூலாதாரங்கள் மற்றும் அவற்றின் நிகழ்த்தகூடிய சாத்தியக்கூறுகளை சுருக்கமாக வழங்குகிறது. வெளியிடப்பட்ட முடிவுகள் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன் அவை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டாக கருதப்படமாட்டாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, இலங்கை நிதி அமைப்பின் மீதான […]