கட்டுரை முக்கிய செய்திகள்

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமை பறிப்பு

  • August 23, 2025
  • 0 Comments

1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு நிறுத்தியது. நீதியின் பெயரில் அரசியல் தண்டனைதானா? இல்லையா அதிகார துஷ்பிரயோகமா என்ற விவாதம் இன்றும் தொடர்கின்றது 1980 அக்டோபர் 16 அன்றைய நாள் இலங்கை அரசியல் வரலாற்றில் விவாதம் குன்றாத நாளாகவே நினைவுகூரப்படுகின்றது. அந்த நாள்தான், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ‘உiஎiஉ னளையடிடைவைல’—அதாவது பிரஜாஃஅரசியல் உரிமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

  • August 23, 2025
  • 0 Comments

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • August 23, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

  • August 23, 2025
  • 0 Comments

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 2023 செப்டம்பரில், ஹவானாவில் நடைபெற்ற பு77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் லண்டன் பயணத்தில் அவர் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும், அப்பயணத்தில் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்று காலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • August 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • August 19, 2025
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் குற்றவாளியொருவர் அநுர அரசில் அமைச்சராய் இருப்பது பாரிய பிரச்சினை- புபுது ஜயகொட

  • August 19, 2025
  • 0 Comments

நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 80 இலட்சம் […]

உள்ளூர்

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் : அரசியலமைப்பு விவகாரமே உள்வாங்கப்பட்டுள்ளது

  • August 17, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன. இதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், மேலும் 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை காலந்தாழ்த்தாமல் விரைந்து நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்பே அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க, அரசியலமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் நல்லூர் ஆலய பின் வீதி பகுதியில் வாள்வெட்டு : இளைஞன் காயம், ஐவர் கைது

  • August 17, 2025
  • 0 Comments

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் உள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று (16-08) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. நல்லூர் ஆலய கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு திரண்டிருந்தனர். இவ்வேளையில், கும்பல் ஒன்று வீதி தடைக்கு அருகிலுள்ள அரசடி பகுதியில், மக்கள் கூட்டம் மத்தியில் இளைஞன் ஒருவரை குறிவைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது. […]

உள்ளூர்

கொழும்பில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர் தானியங்கி துப்பாக்கியுடன் கைது

  • August 16, 2025
  • 0 Comments

கொழும்பில் பாதாள உலக தாக்குதலை மேற்கொள்ளவிருந்த சந்தேக நபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபர் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை சார்ஜென்ட் மேஜர் ஒருவர் ஆவார். அவரிடம் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன. சந்தேக நபர் மாலபேயில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைதான நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு […]