உள்ளூர் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

  • September 18, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீன,இலங்கை வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சதுரங்க அபெய்சிங்க, சீனா சென்றுள்ளார்

  • September 18, 2025
  • 0 Comments

சீனாவுடன் இலங்கையின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சதுரங்க அபெய்சிங்க, சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் சீனா சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது. பயணத்தின் போது பிரதி அமைச்சர், தென் ஆசியா மற்றும் தென்கிழக்காசிய வணிக அபிவிருத்தி ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பமைப்பு மாநாட்டிலும் […]

உள்ளூர்

இலங்கையே பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாற்றப்படும்-பிரதமர்

  • September 18, 2025
  • 0 Comments

இலங்கையை பிராந்தியத்தில் ; மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களை வழங்கும் நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான மற்றும் ஏற்ற விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டியாவில் திறக்கப்பட்ட 350 மெகாவாட் கொள்ளளவு கொண்ட ‘சோபதனவி’ கலவை மின் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் அவர் இதனை கூறினார். இந்த மின் நிலையம் நாட்டின் மின் தேவையின் 12ம% வரை பங்களிக்கிறது. பிரதமர் தனது உரையில், […]

உள்ளூர்

என்.பி.பி. அரசின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஊழல் ஊடாக சொத்து சேகரிப்பு?

  • September 18, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசின் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மற்றும் வீணாக்கத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற சமூக அமைப்பின் தலைவர் கமந்த துஷாரா, இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். அவர், 2006ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்ட எண் 5ன் கீழ் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். முறைப்பாடு செய்யப்படடுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்: சுகாதாரம், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ்தேசிய கட்சிகளும் சிங்கள கட்சிகளும் சுவிஸ்லாந்தில் பேச்சுவார்த்தை

  • September 17, 2025
  • 0 Comments

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தப்பட்டது. இதே கலந்துரையாடல் இன்று புதன்கிழமை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 19 உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்றனர். இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அடங்கினர். சுவிஸ்லாந்தில் நடைபெறும் கலந்துரையாடல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

CEB யூனியன் இன்று மற்றும் நாளையும் போராட்டம்

  • September 17, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், அரசு CEB ஐ நான்கு தனி நிறுவனங்களாக பிரிக்க முடிவெடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. கடந்த திங்கள் (15) முதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்டம் முடிந்தது, இப்போது இரண்டாம் கட்டம் இன்று (17) மற்றும் நாளை (18) நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களில் தொழில்சங்க உறுப்பினர்கள் வேலை செய்யாமல், குறிப்பாக சில உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் மற்றும் கேள்வி அறிவித்தல் தொடர்பான வேலைகளில் பங்கேற்காமல் இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் […]

உள்ளூர்

சீனாவும் பாகிஸ்தானும் கொண்டுவந்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் நிராகரித்தது

  • September 17, 2025
  • 0 Comments

ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று (14-09-2025) பல மாகாணங்களில் மழை பெய்யும்

  • September 14, 2025
  • 0 Comments

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பொழிவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

  • September 14, 2025
  • 0 Comments

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா 270 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களின் மூலத்தை வெளிப்படுத்தாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் தந்தையின் தனிச்செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக செல்வத்தை குவித்ததாக ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது

உள்ளூர்

செப்டம்பர் 16ஆம் திகதிக்கு முன் தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையென மின்சார சபை தொழில்சங்கங்கள் எச்செரிக்கை

  • September 14, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும், நீடித்து வரும் ‘வேலையின்படி வேலை’ போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. இக்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, முக்கிய பணியாளர் நியமனங்கள் மற்றும் மறுசீரமைப்புச் சிக்கல்கள் குறித்து பல வாரங்களாக மௌனமாக இருந்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை பொறியியலாளர் சங்கத் தலைவர் தனுஷ்க பரக்ரமசிங்க ஊடகங்களிடம் பேசியபோது, ‘அரசாங்கத்திலிருந்தும், அமைச்சரிடமிருந்தும், செயலாளரிடமிருந்தும் எந்த பதிலும் […]