உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வெளிநாடு செல்ல தடை

  • September 13, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது. விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ரதன தேரர் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறும் நோக்கில் இவர் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றம் ரதன தேரரை தலா 5 இலட்சம் மதிப்பிலான இரண்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்

  • September 13, 2025
  • 0 Comments

சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்வி அமைச்சு அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதரரும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியேறுகின்றார்

  • September 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கும் சட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். அதேபோல், சந்திரிக்காவும் விரைவில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேற உள்ளார்.

உள்ளூர்

இலங்கை மாகாணசபை முறைமையை முற்றாக நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐநாவில் தெரிவிப்பு

  • September 11, 2025
  • 0 Comments

இந்தியா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வின் தொடக்க நாளான திங்கட்கிழமை (08-09) தனது நீண்டகால கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலங்கையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கோரியுள்ளது. இந்த 13ஆம் திருத்தம், இந்தியா-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில், 1987 ஆம் ஆண்டு நியூடெல்லியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டது. இலங்கை, இதுவரை 13ஆம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டது. ஜெனீவாவில் இந்தியா நிரந்தர வதிவிட பிரதிநிதி அனுபமா சிங் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இல்ரேலுக்கு சென்ற இலங்கை ஊடகவியலாளர்களை அரசு அனுப்பவில்லையென கௌசல்யா அரியரத்ன எம்பி தெரிவித்துள்ளார்

  • September 11, 2025
  • 0 Comments

எந்தவொரு பொதுப்பணியாளரும் தனிப்பட்ட காரணத்துக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடியும், எனவும் ஆனால் அதற்காக முறையான விடுமுறையை பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌசல்யா அரியரத்னே, செவ்வாய்க்கிழமை (09-09) பாராளுமன்றத்தில், தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பிகர் உறுப்பினர் முஜிபுர் ர{ஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 16 இலங்கை ஊடகவியலாளர்கள் இஸ்ரேலில் பயணம் செய்திருந்ததைப் பற்றிப் ; முஜிபுர் ர{ஹமான் கேள்வியெழுப்பினாhர் ர{ஹமான் கூறியதாவது, இரு ஊடகவியலாளர்கள்; […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழியின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல்

  • September 11, 2025
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில்; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் காவலர்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியமற்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,தெரிவித்துள்ள நிலையில், செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வு மற்றும் உடற்கூறு ஆய்வுகளின் நம்பகத்தன்மை, அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் உறுதி செய்ய முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களிடம் ; கருத்து தெரிவித்த ஆணைக்குழு ஆணையாளர் நிமல் ஜி. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐஸ் போதை பொருளால் ஜேவிபியும் பொதுஜன பெரமுனவும் அரசியல் இலாபமீட்டுகின்றார்கள்- பிரதான எதிர்கட்சி

  • September 10, 2025
  • 0 Comments

ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களையும் திறனை கொண்டுள்ளது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது இதுகுறித்து நடைபெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கா நேற்று (09-09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் குறிப்பிட்டதாவது, இலங்கைக்கு கடத்தப்பட்டதாகக் கருதப்படும், ‘ஐஸ்’ என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

எல்லா – வெல்லவாயை விபத்திற்கு சாரதியே காரணம்- பிரதி பொலிமா அதிபர்

  • September 10, 2025
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொடா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி 24வது மைல் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றது. தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா பயணத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிடத்தை அகற்றுமாறு போராட்டம்

  • September 7, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

செம்மணி மனிதப்புதைகுழி பகுப்பாய்வுக்கு ஐ.சி.ஆர்.சி. க்கு நீதியமைச்சு அழைப்பு

  • September 7, 2025
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது. இதன்படி, செஞ்சிலுவை சங்கம் விரைவில் பங்கேற்கும் என அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் […]