உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • August 6, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • August 6, 2025
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • August 6, 2025
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

  • August 2, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]

உள்ளூர்

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • August 1, 2025
  • 0 Comments

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார். அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த […]

உள்ளூர்

கல்முனை வடக்கு உப பிரதேசசெயலக வழக்கு 2026 ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  • July 30, 2025
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர். அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • July 29, 2025
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை […]