தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்படை நேற்று 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களின் மூன்று மீன்பிடி படகுகளையும் கைது செய்துள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் தனித்த சம்பவமாக கைது செய்யப்பட்டனர் எனவும் ஸ்டாலின் […]