உள்ளூர் முக்கிய செய்திகள்

எல்லா – வெல்லவாயை விபத்திற்கு சாரதியே காரணம்- பிரதி பொலிமா அதிபர்

  • September 10, 2025
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொடா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி 24வது மைல் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றது. தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா பயணத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 […]

உள்ளூர்

பதுளை எல்லா – வெல்லவாயை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் இழப்பீடு

  • September 6, 2025
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எஸ்யூவி வாகனத்துடன் மோதியதையடுத்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • September 6, 2025
  • 0 Comments

கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்

இணையனுசரணை நாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

  • September 3, 2025
  • 0 Comments

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்திற்கான வலுவான சான்றாக செம்மணி மனிதப்புதைகுழி அமைகின்றது என்றும், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக இணையனுசரணை நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளன. அவர்கள் அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய பிரேரணை வரைவில் மூன்று முக்கிய கூறுகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவை: சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

பாதாள உலக கோஸ்ட்டி கைதானது; அரசியல் நாடகமாக மாறியதா? நடவடிக்கை

  • September 1, 2025
  • 0 Comments

பிரபல குற்ற உலகத் தலைவரான மனுதினு பட்மசிறி பெரேரா அமய கேஹெல்படுத்தர பட்மே மற்றும் மேலும் நால்வர் குற்றவாளிகளை கைது செய்து நாடுகடத்தி வருவித்த சம்பவம், விடுதலைப் புலிகளின் தோல்வியை விடப் பெரிய நிகழ்வாகவே அரசாங்கம் விளம்பரம் செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல் துறை மாபொலிஸ் பிரியந்த வீரசூரிய தலைமையில் மூத்த அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விரைந்து சென்று, பட்மே மற்றும் பிறரை வரவேற்று, ஊடகங்களுக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்றைய எரிபொருள் விலை மாற்றத்தின் பின் விலை நிலைத்திருக்கும் – சிபிசி

  • August 31, 2025
  • 0 Comments

  இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (31-08) நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ள மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகும் மாறாமல் நீடிக்கும் என சிலோன்   பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)  இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு மொத்தத்தில் சுமார் 10 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதைத் தவிர, எரிபொருள் விலைகளில் பெரிய மாற்றமில்லை. ‘அது குறிப்பிடத்தக்க குறைப்பா என்பதைக் குறித்து நான் முடிவு செய்ய முடியாது,’ எனவும் குறிப்பிட்டார். இலங்கை தற்போது உலக […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

  • August 30, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் […]

உள்ளூர்

கொழும்பில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த 3 தமிழ் இளைஞர்களுக்கு வலை விரித்துள்ள டிஐடியினர்

  • August 21, 2025
  • 0 Comments

தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களை கைது செய்ய, பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரி புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் றுரு-56 வகை துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அவர் மற்றும் அவரது குழுவினர் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் பொலிஸாரால் […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

  • August 20, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதே விடயம் தொடர்பில் முன்னாள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

  • August 15, 2025
  • 0 Comments

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.