உள்ளூர்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

  • August 13, 2025
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று உயிரிழந்த பெண்ணின் வழக்கை எந்த பொலிஸ் பிரிவு கையாள்வதென குழப்பம்

  • August 10, 2025
  • 0 Comments

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது தொடர்பாகப் பொலிஸாரிடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடம் அக்கராயன், கிளிநொச்சி அல்லது மாங்குளம் பொலிஸ் பிரிவில் எதற்குட்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் சிக்கினர். இந்தத் தெளிவின்மை காரணமாக பொலிஸ் நடவடிக்கைகள் தாமதமடைந்ததோடு, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் […]

உள்ளூர்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • August 10, 2025
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • August 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

உள்ளூர்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள் போராட்டம் நடைப்பெற்றது

  • August 10, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும். போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

  • August 5, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள், கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04-08) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டன. சுமார் 103 கிலோகிராம் (ஈரமான எடை) கொண்ட இந்த கஞ்சா பொதிகளின் சந்தை பெறுமதி 23 மில்லியன் ரூபாயாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினர் கைப்பற்றிய கஞ்சா பொதிகள், மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உலகம் முக்கிய செய்திகள்

பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு

  • July 19, 2025
  • 0 Comments

காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (றுகுP) தெரிவித்துள்ளது, மேலும் அந்த பகுதியில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி சுவைதா மாகாணத்தில் ‘உடனடி போர்நிறுத்தத்தை’ அறிவிக்கிறார். காசாவில் தடுத்து […]

உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தாதியர் பற்றாக்குறை தீர்வுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்

  • July 15, 2025
  • 0 Comments

சுகாதாரத் துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு, புதிய ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியாகும் என அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். மருத்துவ துறையில் தாதியர் சேவை தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் 33 வைத்தியசாலைகளில் ஒருவரும் தாதியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தீர்வாக, 2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 2650 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு நிவாரணங்களுக்குப் பதிலாக நாளுக்கு நாள் வரிகளை அதிகரிக்கிறதென காவிந்த ஜயவர்த்ன தெரிவிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பிலே அனைவரும் கதைக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மக்களுக்கு அதிகரித்துவரும் வரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாளுக்கு நாள் வரி அதிகரித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]