உள்ளூர் முக்கிய செய்திகள்

தென்னக்கோனை பதவி நீக்க 151 வாக்குகள் ஒருவரும் எதிர்க்கவில்லை

  • April 9, 2025
  • 0 Comments

இலங்கை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று (08-04) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று மாலை இடம்பெற்றதுடன், இதில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 151வாக்குகள் அளிக்கப்பட்டன. அதேவேளை இதற்கு எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை. எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்த யாழ் யுவதி வேறொரு ஆணுடன் ஓட்டம் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

  • April 9, 2025
  • 0 Comments

யாழில் .பிரான்ஸ் வாழ் புலம்பெயர் இளைஞன் ஒருவரை திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண், வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிரான்ஸ் இருந்து சென்ற மணமகனுக்கும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் யுவதி ஒருவருக்கும் அண்மையில் யாழில் திருமணம் இடம்பெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

டொனால்ட் ட்ரம்புக்கு அநுரகுமார கடிதம் வரியை நீக்க கோரி

  • April 9, 2025
  • 0 Comments

இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என தொழில் அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (8-04) நடைபெற்ற அமர்வின் போது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

 வவுனியாவில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில்; நடவடிக்கை எடுக்க வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

  • April 9, 2025
  • 0 Comments

2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08-04) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

குருணாகல், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு,

  • April 8, 2025
  • 0 Comments

குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதனை உடன நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்

  • April 7, 2025
  • 0 Comments

இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என வேண்டுகோள்விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் ஆஜர்!

  • April 7, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

நள்ளமா? நல்லமா? சாமர சம்பத் தொடர்ந்தும் உள்ளளே தான்

  • April 7, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர்

முஸ்லீம் இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைப்பதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்ட ஆவணம் வெளிவந்தது

  • April 7, 2025
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை […]