உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி

  • July 27, 2025
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் […]

உள்ளூர்

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  • July 25, 2025
  • 0 Comments

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு […]

உள்ளூர்

செம்மணி மனித புதைகுழி நாட்டின் 3வது பெரிய மனித புதைகுழியாக அடையாளம்

  • July 24, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன. இது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் பெறுகிறது. முன்னதாக மூன்றாவது பெரிய புதைகுழியாக இருந்தது மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2023ல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி. அங்கு 82 எலும்புக்கூடுகள் அகழப்பட்டது. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் 18 நாட்கள் நீடித்த […]

உள்ளூர்

புத்தளத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

  • July 23, 2025
  • 0 Comments

புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • July 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் உயர் பதவி அமர்த்தப்பட்டுள்ளார்

  • July 20, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் செயல்படும் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த பதவியில் பணியாற்றி வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘விஸ்டம் ஓக்’ (றுளைனழஅ ழுயம) எனும் நிறுவனம் 2016இல் நிறுவப்பட்டதுடன், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை நிர்வகித்து வருகின்றதாக சமூக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அர்ஜுன் மகேந்திரன், […]

உள்ளூர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • July 19, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 4 முதல் 5 வயது சிறுமியினுடையது என சந்தேகம்

  • July 16, 2025
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு வழக்கு நேற்று (15-07) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார். அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டம் தொடர்பான தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நீதிமன்றத்திற்கு […]