உள்ளூர்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

  • August 4, 2025
  • 0 Comments

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • August 4, 2025
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

உள்ளூர்

நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாக பார்க்கப்படும் நிலை கவலையளிக்கின்றது- நாமல் ராஜபக்ச

  • August 2, 2025
  • 0 Comments

புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போது நிலவுகின்றது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். வடக்கு பகுதியில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடுவதற்கே நிதி வழங்கிய புலம்பெயர் தமிழர்கள் மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசாங்கம், நாட்டை பாதுகாக்க போரில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினரை போர்க்குற்றவாளிகளாக மதிப்பது சோகம் என அவர் தெரிவித்தார். முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் […]

உள்ளூர்

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • August 1, 2025
  • 0 Comments

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார். அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த […]

உள்ளூர்

கணவனை கொலை செய்து சடலத்தை புதைத்த மனைவி 2 மாதங்களின் பின் தோண்டிய பொலிஸார்.

  • July 18, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல – ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலம் நேற்று (17) வலஸ்முல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளதாக கடந்த 8ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 16ஆம் திகதி அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் நடைபெற்ற சோதனையின் போது மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தினமும் மனைவியுடன் தகராறில் […]

உள்ளூர்

கிழக்கு கண்டெய்னர் முனையம் தனியாராக்கப்படவில்லையென என புபுதுவின் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது

  • July 17, 2025
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையம் (ECT) ) தனியாராக்கப்படுவதாக முன்னணி சோசலீச கட்சி (FSP) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தத் தரப்பில், அண்மையில் ECT முனையத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Colombo Eastern Container Terminal (Private) Limited எனும் புதிய வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் தனியாராக்கல் முயற்சி இருக்கின்றதா எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்தளித்த துறைமுகங்கள் மற்றும் குடிமா விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு நிவாரணங்களுக்குப் பதிலாக நாளுக்கு நாள் வரிகளை அதிகரிக்கிறதென காவிந்த ஜயவர்த்ன தெரிவிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பிலே அனைவரும் கதைக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மக்களுக்கு அதிகரித்துவரும் வரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாளுக்கு நாள் வரி அதிகரித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]

கட்டுரை

நட்புகள் உண்மையாகவே அனைத்தும் தானா?

  • July 14, 2025
  • 0 Comments

பல நேரங்களில் அது உண்மையாகவே உணரப்படுகிறது, அல்லவா? புத்தர் காலத்தில் நடந்த ஒரு அழகான நிகழ்வை இந்தக் கருத்துடன் நினைவுகூரலாம். ஒரு நாள் ஆனந்த தேரர், “பகவனே, நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் ஆகியோர் ஆன்மீக வாழ்வின் பாதியைக் கொண்டவர்களே என நினைக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு புத்தர் பதிலளிக்கும்போது, “இல்லை ஆனந்தா, இப்படிப் பேசாதே. நல்ல நண்பர்கள், நல்ல உறவினர், நல்ல தோழர்கள் என்பதே முழுமையான ஆன்மீக வாழ்வு” என்றார். இது ஒரு […]

உள்ளூர்

இலங்கையின் கல்விதுறையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மாற்றங்கள் ஆரம்பமென பிரதமர் தெரிவிப்பு

  • July 13, 2025
  • 0 Comments

இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும். இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கையுள்ளது- ரஸசிய வெளிவிவகார அமைச்சர்

  • July 11, 2025
  • 0 Comments

தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ உறுதியளித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவின் (ஆசியான்) அமைச்சர் மட்ட நிகழ்வுகளின் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10-07) நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இலங்கை – ரஷ்ய நல்லுறவில் அழுத்தங்களைத் தோற்றுவித்திருக்கும் […]