இலங்கை கடற்படையால் முடியாதெனில் தமிழ் மீனவர்களே இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவர்- ரவிகரன் எம்.பி
வடக்குக் கடற்பரப்பில் அதிகரித்து வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையால் முடியவில்லையெனில், அந்தப் பொறுப்பை ஒரு மாதத்திற்கு மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு; வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார மன்னார் முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகின்றன என்றும், இது தொடர்பாக கடற்படையும் அரசாங்கமும் காரணங்களையே கூறிக்கொண்டிருப்பதாகவும் […]
