உள்ளூர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • August 4, 2025
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை

  • July 24, 2025
  • 0 Comments

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், அவை யாருடைய அழுத்தத்துக்காகவும் நிறுத்தப்படக்கூடாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நேற்று (22-07) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களில் முன்னேற்றம் காணப்படுவதைக் குறிப்பிட்ட ஆளுநர், மக்களுக்கான சேவையில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி போன்ற சேவைகளை விரைவாக வழங்குமாறும் கூறினார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • July 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர்

கணவனை கொலை செய்து சடலத்தை புதைத்த மனைவி 2 மாதங்களின் பின் தோண்டிய பொலிஸார்.

  • July 18, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல – ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலம் நேற்று (17) வலஸ்முல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளதாக கடந்த 8ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 16ஆம் திகதி அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் நடைபெற்ற சோதனையின் போது மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தினமும் மனைவியுடன் தகராறில் […]

உள்ளூர்

கிழக்கு கண்டெய்னர் முனையம் தனியாராக்கப்படவில்லையென என புபுதுவின் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது

  • July 17, 2025
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையம் (ECT) ) தனியாராக்கப்படுவதாக முன்னணி சோசலீச கட்சி (FSP) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தத் தரப்பில், அண்மையில் ECT முனையத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Colombo Eastern Container Terminal (Private) Limited எனும் புதிய வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் தனியாராக்கல் முயற்சி இருக்கின்றதா எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்தளித்த துறைமுகங்கள் மற்றும் குடிமா விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் […]

உள்ளூர்

சர்சைக்குரிய 323 கொள்கலன்களையும் வர்த்தக வசதியை இலகுபடுத்தும் வகையில்; விடுவிக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவிப்பு

  • July 15, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டின் முதற்காலத்தில் சுங்கத்துறை மூலமாக 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், வழமைக்கே புறம்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், அந்தக் கொள்கலன்களில் மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த விடயத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சுங்கத்துறை ஊடக பேச்சாளர், கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவாலி அருக்கொடை, வருமானத்தை சேகரிக்க மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க வேண்டிய பொறுப்பை சுங்கத்துறை வகிக்கின்றதாக கூறினார். ‘சரக்குகளை நீண்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்க வரிவிதிப்பு இலங்கையின் பொருளாதார நரம்பில் நீளும் அழுத்தம்

  • July 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசு, சமீபத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு மேலதிக வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் உலக வணிகத்தில் அதிர்வெண்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இலங்கையின் சில முக்கிய ஏற்றுமதி பொருட்கள் – குறிப்பாக ஆடைத் தயாரிப்புகள், தேயிலை, ரப்பர் சார்ந்த பொருட்கள் என்பவை இதில் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு சாதாரண வரித்தீர்மானமாக எண்ணுதல் தவறானதாகும் ஏனெனில் அமெரிக்கா இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தை. அதிலும் குறிப்பாக ஆடைத் […]

உள்ளூர்

இலங்கையின் கல்விதுறையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மாற்றங்கள் ஆரம்பமென பிரதமர் தெரிவிப்பு

  • July 13, 2025
  • 0 Comments

இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும். இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை இந்தியா உன்னிப்பாக பார்க்கின்றது

  • July 12, 2025
  • 0 Comments

ஜெனரல் அசீம் முனீர் அண்மையில் இலங்கைக்கு முக்கியமான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை சாதாரண மரியாதை விஜயமாக மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் உள்ள பெரிய நிலைத்திறனியல் நோக்கங்களை மேற்கொண்டதாக இந்தியா பார்க்கின்றது இந்த விஜயத்தின் போது அவர் இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ பயிற்சி, உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக வெளியிடப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வை இந்திய பாதுகாப்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாணந்துறையில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் காயம்.சந்தேக நபர் தப்பியோட்டம்

  • July 11, 2025
  • 0 Comments

இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கி சுடுதலால் காயமடைந்த நபர் பானந்துரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் காயமடைந்தவர் 32 வயது, மாலமுள்ள பகுதியில் வசிப்பவர். துப்பாக்கி சூட்டிற்கான காரணமும் சந்தேக நபர்களின் தொடர்பும் இதுவரை தெரியவில்லை; துப்பாக்கி சூடுக்கு பிஸ்டல்ரக துப்பாக்கி […]