உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • August 6, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • August 6, 2025
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • August 6, 2025
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உள்ளூர்

ஐநாவுக்கு அனுப்பி கடிதத்தில் 115 தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 11 மதத்தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்

  • August 5, 2025
  • 0 Comments

செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய, உரிய கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் நடைபெற வேண்டும் எனவும், மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் உறுப்புநாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில், வடகிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகள் மற்றும் 115 சிவில் அமைப்புகளுடன், 11 மதத்தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். செப்டெம்பர் […]

உள்ளூர்

மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் கைது

  • August 4, 2025
  • 0 Comments

இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 74 வயதுடைய மாமியாரே கொலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தினை தொடர் தகவல்களில்இ இரத்தினபுரி டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • August 4, 2025
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • July 29, 2025
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • July 29, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஸ எம்.பி இன்று நாடு திரும்பியுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்தில், தனிப்பட்ட தேவைக்காக நேற்று (28-07) நாமல் ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தார். 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை

  • July 24, 2025
  • 0 Comments

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், அவை யாருடைய அழுத்தத்துக்காகவும் நிறுத்தப்படக்கூடாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நேற்று (22-07) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களில் முன்னேற்றம் காணப்படுவதைக் குறிப்பிட்ட ஆளுநர், மக்களுக்கான சேவையில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி போன்ற சேவைகளை விரைவாக வழங்குமாறும் கூறினார். […]