உள்ளூர்

பதுளை எல்லா – வெல்லவாயை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் இழப்பீடு

  • September 6, 2025
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எஸ்யூவி வாகனத்துடன் மோதியதையடுத்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • September 6, 2025
  • 0 Comments

கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • September 3, 2025
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. வடக்கு கடற்படை தளபதியின் கீழ் செயல்படும் ளுடுNளு கஞ்சதேவா முகாமினர் பெற்ற நம்பகமான தகவலின் அடிப்படையில், சம்பிலித்துறை கடற்கரையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, நான்கு மூட்டைகளில் மறைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் தெருமதிப்பு ரூபாய் 21 மில்லியனை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

பொலிஸார் மாறவில்லை

  • September 3, 2025
  • 0 Comments

கம்பஹா யக்கலவில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்தனர். ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த கட்சியான முன்னணி சோசலிசக் கட்சி, இந்தத் தாக்குதலுக்கு ஜே.வி.பி. அரசியல்வாதிகள் சிலரை பொறுப்பாகக் குற்றம்சாட்டி, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை காவல்துறை புறக்கணித்தது. காவல்துறைத் தலைமை அதிகாரி பிரியந்த வீரசூரிய, காவல்துறையில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்றும், தாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம் என்றும் கூறி வந்தாலும், […]

உள்ளூர்

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மத்திய வங்கியின் சுயாதீனம் அவசியம் என்கிறார் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

  • September 1, 2025
  • 0 Comments

மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு உரையில் அவர் பேசியபோது, அரசியல் தலையீடும் சுயாதீனமின்மையும் 2022ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை உருவாக்கிய முக்கிய காரணிகள் எனக் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் பெரும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ‘பணம் அச்சிடும்’ நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனால் பணவீக்கம் 70 சதவீதத்திற்கு அருகில் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். விலை நிலைத்தன்மையும் நிலையான பொருளாதார வளர்ச்சியும் உறுதிப்படுத்த, தெளிவான அதிகாரப்பூர்வ பணிக்கூற்று கொண்ட வலுவான மற்றும் சுயாதீன மத்திய வங்கி அவசியம் என அவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்றைய எரிபொருள் விலை மாற்றத்தின் பின் விலை நிலைத்திருக்கும் – சிபிசி

  • August 31, 2025
  • 0 Comments

  இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று (31-08) நள்ளிரவில் அறிவிக்கப்படவுள்ள மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகும் மாறாமல் நீடிக்கும் என சிலோன்   பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)  இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு மொத்தத்தில் சுமார் 10 சதவீத குறைப்பு ஏற்பட்டுள்ளதைத் தவிர, எரிபொருள் விலைகளில் பெரிய மாற்றமில்லை. ‘அது குறிப்பிடத்தக்க குறைப்பா என்பதைக் குறித்து நான் முடிவு செய்ய முடியாது,’ எனவும் குறிப்பிட்டார். இலங்கை தற்போது உலக […]

முக்கிய செய்திகள்

ஐயோ… வீட்டு சாப்பாட்டை சாப்பிட விடுங்கோவன்- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

  • August 30, 2025
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை பரிசோதித்தபோது, வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு உடல்நிலை பிரச்சினை எதுவும் இல்லை எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்பில், தனது கைது தொடர்பான பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • August 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

  • August 30, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் […]