முக்கிய செய்திகள்

காங்கேசன்துறை தையிட்டி சட்டவிரோ திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள்; மாற்று காணியே கோருகின்றனர்-வடமாகாண ஆளுநர

  • February 2, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளார் தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன […]

முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

  • February 1, 2025
  • 0 Comments

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • February 1, 2025
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.    

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்றப்பட்டவர் மீண்டும் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர் 33 வயதுடைய இளம் குடும்பஸ்த்தரான கணேசமூர்த்தி ரமேஸ் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணேசமூர்த்தி ரமேஸ் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் காப்பாற்றும் நோக்கில் […]

முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று தொடக்கம் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்

  • January 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னரே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27-01-20250 திங்கட்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், இன்று (28) செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளாவன […]

முக்கிய செய்திகள்

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

  • January 27, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (27) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும். முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரையிலும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

புலிகளின் மீள செயற்படும் சாத்தியமிருப்பின நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

  • January 26, 2025
  • 0 Comments

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

  • January 25, 2025
  • 0 Comments

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் […]

முக்கிய செய்திகள்

ஸ்கானர் இயந்திரத்தின் உதவியுடன் கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 10 பேர்; கைது

  • January 25, 2025
  • 0 Comments

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு தயாரான நிலையில் இருந்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைபபின் போது கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நிலத்தினை ஏறத்தாழ 1000 அடி ஸ்கான் செய்யக்கூடிய ஸ்கானர் […]

முக்கிய செய்திகள்

யாழ் இந்துக் கல்லூரியின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியிடப்பட்டது

  • January 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது. யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக […]