உள்ளூர் முக்கிய செய்திகள்

திருமலை மூதூரில் விபத்து 29 பேர் காயம்

  • March 1, 2025
  • 0 Comments

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர், இருதயபுரம் பிரதேசத்தில் இன்று) இடம்பெற்ற விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடையிலிருந்து சேருவில் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு யாத்திரீர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் பெண்களும் மூன்று சிறுவர்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எப் தமிழரசு மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டும். சி.வீ.கே.சிவஞானம்

  • March 1, 2025
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திட்டமிட்ட வகையில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்- பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த

  • March 1, 2025
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த இங்கு சுட்டிக்காட்டினார்.

யாழ் போதனா வைத்தியசாலை வழமைக்கு திரும்பியது

  • March 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் இன்று முதல் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர். இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்க முகங்கொடுத்திருந்த நிலையில் நோயாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் நலன் கருதி கிளினிக் சேவைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

  • February 28, 2025
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • February 27, 2025
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்பாணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட திடீரென மரணம்

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிதவேளை தவறுதாலாக கீழே விழுந்துள்ளார். இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (25-02-2025) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமலை குழிக்கு அனுப்பவுள்ளதாக அரச எம்.பி கூறியுள்ளதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் – சாகர காரியவசம்

  • February 25, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது. நாமல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் படையினரின் உயர் மட்டத்தினருக்குமிடையில் அவசர சந்திப்பு

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட […]