உள்ளூர் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • February 27, 2025
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்பாணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட திடீரென மரணம்

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிதவேளை தவறுதாலாக கீழே விழுந்துள்ளார். இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (25-02-2025) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமலை குழிக்கு அனுப்பவுள்ளதாக அரச எம்.பி கூறியுள்ளதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் – சாகர காரியவசம்

  • February 25, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது. நாமல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூடுகளும் கைதுகளும் தொடர்கின்றன.

  • February 25, 2025
  • 0 Comments

ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20-02-2025) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இது தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தினால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும்… மீண்டும்… தோல்வியுற்ற தலைவர்கள் இணைந்து 9 கட்சி கூட்டு அமைத்து உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டி

  • February 24, 2025
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசு மீதான மக்கள் அங்கீகாரம் உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

  • February 23, 2025
  • 0 Comments

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய அரசியலமைப்பு நிட்சயம் உருவாக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

  • February 22, 2025
  • 0 Comments

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்கள் தமது தாய் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வர்- பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

  • February 22, 2025
  • 0 Comments

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல் போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொரு பிரஜையும் தனது தாய் மொழியில் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முஹம்மத் முனீர் முளப்பர் தெரிவித்தார். சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேற்று (21-02-2025) மாகும்புர, பன்னிபிட்டியவில் உள்ள தேசிய கல்வி மொழி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • February 21, 2025
  • 0 Comments

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட […]