உள்ளூர்

கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!

  • January 1, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது. மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.   5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)31.12.2024

  • January 1, 2025
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறி நடைப்பெற்றது யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ் அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல் https://youtu.be/cUcX_A02X8g

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)30.12.2024

  • December 31, 2024
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம் தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம் புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன் https://youtu.be/JX8YzBkqb1I

உள்ளூர்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

  • December 26, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]

உள்ளூர்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • December 25, 2024
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் அதன் இருப்புக்களில் கை வைக்கும் மத்திய அரசு

  • December 23, 2024
  • 0 Comments

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 17, 2024
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • December 15, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

உள்ளூர்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • December 3, 2024
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர்

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்.

  • December 3, 2024
  • 0 Comments

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள்  35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்இ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். […]