உள்ளூர்

அமைச்சரவை மாற்றம் பிற்போடப்படுகின்றதா?

  • June 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று […]

உலகம்

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் 50 வீதம் வரி விதிப்பு

  • May 26, 2025
  • 0 Comments

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் […]

உள்ளூர்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாங்காய் விற்ற பட்டதாரி

  • May 26, 2025
  • 0 Comments

திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகய்திற்கு முன்பாக ஒரு பட்டதாரி வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறிய சீ.எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மாங்காய் விற்பனை செய்வது போல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தாம் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளை தாம் எழுதியதாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மைப்போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் […]

உள்ளூர்

வட, கிழக்கிலுள்ள மக்களின் நிலங்களை கையகப்படுத்தும திட்டம் அரசிடம் இல்லையென்கிறார் பிரதமர்

  • May 24, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23-05) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை […]

உள்ளூர்

வடக்கில் காணி அபகரிப்பை நிறுத்தக்கோருமாறு தென்னாபிரிக்காவிடம் கஜேந்திரகுமார் எம்.பி கோரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்க தூதுவருக்கும் கஜேந்திரகுமார் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. இ்நத சந்திப்பின் பின்னர் கஜேந்திரகுமார் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இன்று காலை கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க தூதுவரைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் மூன்று விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தேன். இந்த சந்திப்பின் போது கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த […]

உள்ளூர்

கர்ப்பமான மனைவியையும் வயிற்றிலுள்ள சிசுவையும் தூக்கில் தொங்கவிட்ட கொன்ற கணவன்- மாத்தறையில் சம்பவம்

  • May 19, 2025
  • 0 Comments

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார். உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார். ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தடையால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லையென – சவேந்திரசில்வா கவலை

  • May 19, 2025
  • 0 Comments

2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும்,இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திரசில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திரசில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ராஜபக்ச அரசாங்கத்தின் போர் குற்றங்களை ஒரு போதும் மறத்தலாதென கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் தெரிவிப்பு

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர் ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் […]

உலகம் கனடா

முன்னான் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ காமெடி பீஸென டிரம்ப் தெரிவிப்பு

  • May 7, 2025
  • 0 Comments

பிரதமர் மார்க் கார்னியை ‘ஆளுனர் கார்னி’ எனக் அழைக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமரை ‘கவர்னர் கார்னி’ என அழைத்தது இல்லையா? என ஊடகங்கள் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பயிருந்தன. ‘இன்னும் அழைக்கவில்லை. ஒருவேளை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது எனவும். ஆனால் ஜஸ்டின் டிரூடோவுடன் தமக்கு பல நகைச்சுவையான தருணங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது கார்னி பிரதமராகியிருப்பது, கனடாவுக்கே ஒரு பெரிய முன்னேற்றம் என டொனால்ட் டிரம்ப குறிப்பிட்டுள்ளா எதிர்வரும் […]

உலகம் கனடா

கனடா விற்பனை செய்யப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதியிடம் கனடா பிரதமர் நேரடியாக தெரிவித்துள்ளார்

  • May 7, 2025
  • 0 Comments

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார் அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு […]