முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • January 20, 2025
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

நெல் களஞ்சியசாலைகளை இராணுவத்தினர் சுத்தப்படுத்துகின்றனர்

  • January 19, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் […]

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • January 19, 2025
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • January 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • January 18, 2025
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • January 17, 2025
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • January 16, 2025
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் !

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார். தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் யாழ் இந்திய துணைதூதுவருக்கு மகஜர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பருத்தித்துறையில் மரக்கறி பொதுச் சந்தை திறப்பு!

  • January 10, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025) திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை […]