உள்ளூர்

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாவிட்டால் பொருளாதார சுனாமியில் சிக்குமென சஜித் எச்செரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் தொடங்கிய தொழிற்சாலை இன்று முற்றிலும் மூடப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் 2028 முதல் நாட்டின் கடனை திரும்ப செலுத்த 5மூ பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிதிச் சட்ட கட்டளைகள் மீதான விவாதத்தில் தெரிவித்தார். தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு, 5மூ வளர்ச்சியை அடைவது கடினம் என்ற அவர், இவ்வாறு வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்படவில்லை […]

உள்ளூர்

அரசின் காணி அபகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம் தீர்வை தராதென்கிறார் சட்டத்தரணி சுமந்திரன்

  • May 21, 2025
  • 0 Comments

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார். காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை […]

உள்ளூர்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு உடன் மீளப் பெறவேண்டுமென ; கஜேந்திரகுமார் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்

  • May 20, 2025
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட, 2430ஃ2025 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கருக்கும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வை காணாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் கேள்வி

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை, முப்பது வருட யுத்தம் நிகழ்ந்தமைக்கான மூல காரணங்களை தேடியறிந்து அவற்றுக்குத் தீர்வு தேட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றி அறிக்கையினை மன்றில் சமர்பிக் நீதிமன்றம் உத்தரவு

  • May 19, 2025
  • 0 Comments

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தடையால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லையென – சவேந்திரசில்வா கவலை

  • May 19, 2025
  • 0 Comments

2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும்,இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திரசில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திரசில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ராஜபக்ச அரசாங்கத்தின் போர் குற்றங்களை ஒரு போதும் மறத்தலாதென கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் தெரிவிப்பு

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர் ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் […]

உள்ளூர்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்தது பேரானந்தமென்கிறார் தென்னிந்திய நடிகர் எம்.எஸ் பாஸ்கர்

  • May 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 42 நாட் […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபையில் சஜித் அணியே ஆட்சிமைக்கும்- ரஞ்சித் மத்தும பண்டார

  • May 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் என கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் புதிய முதல்வர் தமது கட்சியைச் சேர்ந்தவரே நியமிக்கப்படுவார் என அவர் மேலுமி; தெரிவித்துள்ளார் ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளூராட்சி சபைகளில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும […]