உள்ளூர்

யாழ்ப்பாணத்தில்  இளைஞர் சடலமாக மீட்பு

  • May 6, 2025
  • 0 Comments

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இறப்புக்காரணம் இதுவரை அறியப்படவில்லை, சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

ஊழலை ஒழிக்க உறுதிமொழி – இன நல்லிணக்கத்துக்கும் அரசு உறுதிபூர்வம்: சபாநாயகர்

  • May 5, 2025
  • 0 Comments

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் முழுமையான உறுதியுடன் செயற்படுவதாகவும், இன மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஊழலை ஒழிக்கும் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வகையான கருத்துகளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்களை கடந்த (02) ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்து பேசியபோது […]

உள்ளூர்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

  • May 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று (30-04) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம் சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், வீட்டிலிருந்து புறப்பட்டுச் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராகவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

  • April 25, 2025
  • 0 Comments

20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில், வீட்டின் உரிமையாளரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  • April 25, 2025
  • 0 Comments

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மின்னல் மற்றும் இடி ஏற்படும் […]

உள்ளூர்

இலங்கையில் வேருன்றும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் – ஞானசார தேரர்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு உண்மையான நீதியை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும்,இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள் […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் குழு நியமனம்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதான குழுவின் கீழ் மேலும் பல குழுக்களை உருவாக்கியுள்ளோம் பிரதான குழு ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்கனவே ஆராய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு சுயாதீன வழக்குரைஞர் குழு அவசியமென கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

  • April 21, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்காக சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கொலை செய்யும் கூலிப்படைகள் இல்லாத வெள்ளை வான்கள் இல்லாத சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இல்லாத புதிய சமூகமொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு அன்று நிலவிய அரசியல்கலாச்சாரமே […]