உள்ளூர்

இலங்கையில் பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரிப்பது அதிகமாகின்றது- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

  • July 19, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (18-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் மற்றும் அவர்கள் தாய்மாராகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து இளம்பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்கும் […]

உள்ளூர்

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது- மத்திய வங்கி

  • July 14, 2025
  • 0 Comments

2025 மே மாதத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை 1.507 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 மில்லியன் டொலர் குறைவாகும். இந்த வீழ்ச்சியானது தனிநபர் வாகன இறக்குமதியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த போதிலும், சேவைத் துறையிலுள்ள வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில வர்த்தகப் பொருட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் […]

உள்ளூர்

அர்சுனா எம்பியின் வாயாலேயே எதிர் கட்சி எம்பிக்களை CID யினர் விசாரித்தனர்- தயாசிறி ஜயசேகர

  • July 14, 2025
  • 0 Comments

323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர். இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் […]

உள்ளூர்

ஜனாதிபதி அநுரவின் 22 வாக்குறுதிகளில் ஒன்றே முழுமையாக நிறைவேற்றம் – வெரிட்டே ஆய்வு

  • July 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய 22 முக்கியமான வாக்குறுதிகளில், இதுவரை வெறும் ஒரு வாக்குறுதியே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னணி ஆய்வு நிறுவனம் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு முறையின் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி, “உழைக்கும் போதே செலுத்தும் வரி” எனும் வாக்குறுதியே தற்போதைய வரையில் முற்றிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 21 வாக்குறுதிகளில் 35% மட்டுமே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர்

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகளை சங்கு சைக்கிள் கூட்டணி கைப்பற்றும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • June 7, 2025
  • 0 Comments

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ராஜபக்ஸக்களை நிட்சயம் கம்பி எண்ண வைப்போமென அரசாங்கம் அறிவித்துள்ளது

  • June 6, 2025
  • 0 Comments

ராஜபக்ஸக்களை நிச்சயம் சிறையில் அடைப்போம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். ராஜபக்ஸக்கள், ரணில் விக்ரமசிங்க போன்றோரை சிறையில் அடைப்போம் என்பதனை தெளிவாக கூறுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். சீனி வரி மோசடியின் போது தாமே அந்த முறைப்பாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை கைவிட மாட்டோம் எனவும் வழக்கை முன்னெடுத்துச்செல்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைப்பூண்டு மோசடி, சதொச நிறுவனம் […]

உள்ளூர்

ஈ.பி.டி.பி யுடன் தமிழரசுக் கட்சி பேசியது தொடர்பில் எதுவும் தெரியாதென சிறிதரன் தெரிவிப்பு.

  • June 6, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் நேற்று (05-06) சந்தித்துப் பேசியிருந்தனர் இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்.பியின் தனிநபர் பிரேரணையான மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்பிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் […]

உள்ளூர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவுக்கு அவசர தந்தி அனுப்பிய டக்ளஸ்! […]