உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (25-02-2025) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மத்திய மாகாண ஆளுநருக்கும் சீனாவின் தேசிய இன விவகார அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல்

  • February 25, 2025
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும் சீன மக்கள் குடியரசின் தூதுக் குழுவினருக்கும் இடையே கண்டியில் உள்ள ஆளுநர் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. சீனாவின் தேசிய இன விவகார அமைச்சர் (Minister of the National Ethnic Affairs) பென் யூ(Pan Yue) தலைமையிலான இக்குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சீனாவின் உதவியுடன் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் அதிகளவு சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. […]

உலகம் உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னுரையில் இலங்கை தொடர்பில் நிஸப்தம்

  • February 25, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23-02-2025) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் ஆரம்ப உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று ) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

குற்றச் செயல்களுக்கு துப்பாக்கி தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

  • February 24, 2025
  • 0 Comments

சமூகத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திற்கு புறம்பான கொலைகள் ஒரு தீர்வாகாதுஎன தெரிவித்துள்ள ,லங்கை சட்டத்தரணிகள் சங்கம்,அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களைகட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது 2025பெப்ரவரி 19ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார், சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்தவேளை அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 21ம் திகதி இரவு ,ரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர், பொலிஸாருடனான மோதல் ஒன்றின் போதே […]

முக்கிய செய்திகள்

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • February 20, 2025
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

  • February 20, 2025
  • 0 Comments

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாகப் பாகங்கள் கலக்கப்பட்டவையாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]

முக்கிய செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்து என எவ்வாறு கூற முடியும்? என்ற கேள்விக்கு பதிலளிக்காத- அமைச்சர்

  • February 19, 2025
  • 0 Comments

திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் […]

முக்கிய செய்திகள்

மலையக்திற்கு ஒதுக்கியது போன்று யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அதின நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டுமென மஸ்தான் எம்.பி கோரிக்கை

  • February 19, 2025
  • 0 Comments

அதற்கான முறையான செயற்றிட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025 ) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு – செலவு திட்டம் மக்களை ஓரளவேனும் வாழவைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே காண்கிறோம். குறிப்பாக மலையக […]

முக்கிய செய்திகள்

ரணில் அரசாங்கம்; ஆரம்பித்தவற்றைறே தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் செய்வதற்றை 2023, 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்தவற்றை முன்னெடுத்து செல்வதை போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். […]