முக்கிய செய்திகள்

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்

  • February 6, 2025
  • 0 Comments

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கையில் பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.   உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை […]

முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு ஐநாவில் முக்கிய பதவி

  • February 6, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து. இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மறைவுக்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வரும் சொனாலி சமரசிங்கவுடன் குறித்த பதவி தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின் […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலைகள் செய்தவர்கள தண்டிக்கப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரிக்கை

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும் அதே மௌனத்தை பேணப்போகின்றார்களாவென்ற கேள்வி எழுகின்றது. கடந்த நெருக்கடி […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சிக்கு பயணம்

  • February 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி […]

முக்கிய செய்திகள்

அநுர அரசாங்கம் புரிந்துணர்வுடன் பொய்யுரைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்- நாமல் ராஜபக்ஸ

  • February 5, 2025
  • 0 Comments

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் 120 ரூபாவாக நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது காலம் கடந்த பின்னராவது நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் 120 ரூபாவாக நிர்ணயித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் உத்தரவாத விலையை நிர்ணயிப்பதற்கு முன்னரே ஒருசில பகுதிகளில் விவசாயிகள் வேறு […]

முக்கிய செய்திகள்

ஆட்சியாளர்கள் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியமாகவும் பெற்றுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். தனது”X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் ருளுயுஐனு இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான […]

முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திரமென்பது அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொண்ட சுதந்திரம் மாத்திரமேயாகும்- பேராயர் .

  • February 4, 2025
  • 0 Comments

ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல் மூலம் சுதந்திரத்தை மேலும் நிலைநாட்டி எமது நாட்டில் வாழ்கின்ற பல்வேறு இனத்தவர்களிடையேயும் மதத்தவர்களிடையேயும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் விருத்தி செய்து உண்மையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசியல் தலைவர்கள் பொதுநலத்துடன் நாட்டைக் கொண்டுசெல்வதற்காக செயற்பட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இலங்கையின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவிப்பதையிட்டு […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபயவை அரசாங்கம் கைதுசெய்யவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

  • February 3, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது நீக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

  • February 2, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் நிறைவுக்கு வரவுள்ளது உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இருகட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இரு கட்சிகளினதும் இணைவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை தற்போது; குறிப்பிட முடியாது என தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • February 1, 2025
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.