உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • January 7, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!

  • January 1, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது. மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.   5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)31.12.2024

  • January 1, 2025
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறி நடைப்பெற்றது யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ் அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல் https://youtu.be/cUcX_A02X8g

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)30.12.2024

  • December 31, 2024
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம் தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம் புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன் https://youtu.be/JX8YzBkqb1I

உள்ளூர்

வவுனியாவில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

  • December 26, 2024
  • 0 Comments

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் யாழ். அராலி பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். […]

உள்ளூர்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

  • December 26, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]

உள்ளூர்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • December 25, 2024
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

  • December 24, 2024
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது. அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர்இ உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் களத்தில் இறங்கின இதனால் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 […]

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் அதன் இருப்புக்களில் கை வைக்கும் மத்திய அரசு

  • December 23, 2024
  • 0 Comments

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. […]

உள்ளூர்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • December 19, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]