உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • December 2, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • December 2, 2024
  • 0 Comments

  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் […]

உள்ளூர்

இன்று பதவியேற்கவுள்ள இலங்கையின் புதிய பிரதம நீதியரசர்.

  • December 2, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி […]

உள்ளூர்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • December 2, 2024
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

உள்ளூர்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

  • December 2, 2024
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் – புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது. ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் […]

உள்ளூர்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

  • December 2, 2024
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையை அறிவுறுத்தியிருந்தது. பின்னர் மேலும் இரண்டு வாரகால அவகாசத்தை […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • November 30, 2024
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறும் குலசிங்கம் திலீபன்.

  • November 26, 2024
  • 0 Comments

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • November 25, 2024
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

உள்ளூர்

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

  • November 23, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் […]