உள்ளூர் முக்கிய செய்திகள்

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்கள் இருவர் பிணையில் விடுவிப்பு

  • March 2, 2025
  • 0 Comments

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். ஊடக அமையத்தில் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அஞ்சலிக்கப்பட்டார்

  • March 2, 2025
  • 0 Comments

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இடதுசாரி கொள்கையை கொண்ட, 1949 முதல் 2025 வரையான அவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

  • March 2, 2025
  • 0 Comments

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02-03-2025) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01-03-2025) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார். புனித ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தலுடன் ; தொடர்புடைய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது

  • March 2, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (01-03-2025) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • March 2, 2025
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானி நிறுவனத்தின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக தருமாறு அரசாங்கம் கோரிக்கை

  • March 1, 2025
  • 0 Comments

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • March 1, 2025
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ அங்குரார்ப்பணம்

  • February 28, 2025
  • 0 Comments

எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ சாந்தனின் தாயாரால் இன்று காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரணிலும் சஜித்தும் இணைவது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை

  • February 28, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிடையிலான ஒருங்கிணைப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னரே மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான இறுதி முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டமானது 26.02.2025 அன்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது விடுமுறை நாள் என்பதால் அக் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அது இன்னுமொரு திகதியில் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

1,400 பில்லியன் ரூபாவினை பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்மாறு அரசாங்க அதிபர்களை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

  • February 28, 2025
  • 0 Comments

1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3மூ – 4மூ ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய […]