முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • February 3, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் […]

முக்கிய செய்திகள்

அதிக போதையால் யாழ் இளைஞன் உயிரிழப்பு

  • February 3, 2025
  • 0 Comments

அதீத போதை காரணமாக சுகயீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சுகவீனமுற்று யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக போதையின் போது […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா என்ற நீண்ட சரித்திரம் சரிந்தது

  • January 31, 2025
  • 0 Comments

மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும் இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி […]

முக்கிய செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

  • January 30, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், […]

முக்கிய செய்திகள்

கனடாவின் பிரதமாராக்குங்கள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துகின்றேன்- கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்

  • January 30, 2025
  • 0 Comments

கனடாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நடைப்பபெற்ற குற்றங்களுக்காக அதனை சர்வதேச நீதிமன்றத்தலி நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் ‘ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் இவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்திடம் உறுதியளித்துள்ளார் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை […]

முக்கிய செய்திகள்

இலங்கையும் அமெரிக்காவும் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்குத் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அடங்கலாக 7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு

  • January 28, 2025
  • 0 Comments

இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவுக்காக பிரார்த்தனை செய்யும் – நாமல் ராஜபக்ஸ

  • January 28, 2025
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார். மாவை விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிராத்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் […]

முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது – கடற்படை விளக்கம்

  • January 28, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கடற்படை விளக்கமளித்துள்ளது இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நேற்று (27ஸ்ரீ01-2025) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தனர் எனவே இந்திய மீன்பிடிப்படகுகளை […]

முக்கிய செய்திகள்

ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விரைவில் மீட்க நடவடிக்கையெடுக்கப்படும்- ரஸ்சிய தூதுவர்

  • January 28, 2025
  • 0 Comments

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பதாக இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் உறுதியளித்துள்ளார் இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற […]