உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், […]

முக்கிய செய்திகள்

முஸ்லீம் மாணவி கடத்தப்பட்ட போது காப்பாற்ற முனைந்த இளைஞர் காயம் –

  • January 13, 2025
  • 0 Comments

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார். மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், ‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கண்டி – தவுலகல மாணவி கடத்தலுக்கான காரணம் வெளியானது!

  • January 12, 2025
  • 0 Comments

கண்டி – தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட விசுவமடு பெடியன்!

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்வைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் […]

முக்கிய செய்திகள்

யாழில் மனைவியின் காதை வெட்டி தலை மற்றும் காலினை உடைத்த கணவனுக்கு விளக்கமறியல்!

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காமல் சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்!

  • January 11, 2025
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை, பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்று அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த சாவித்ர சில்வாவின், நிலைமை மோசமாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • January 10, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

உள்ளூர்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு!

  • January 10, 2025
  • 0 Comments

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு! பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

  • January 9, 2025
  • 0 Comments

CLEAN SRILANKA  திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஊடுநுயுN ளுசுஐடுயுNமுயு திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]