உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைதீவில் பிரதேச செயலாளருக்கு அச்சுருத்தல் விடுத்துள்ள கசிப்பு உற்பத்தியாளர்கள், செய்வதறியாது அரச நிர்வாகம்

  • March 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் 26.03.2025 இன்று சுட்டிக்காட்டப்பட்டது. இந் நிலையில் சட்டவிரோத மது மற்றும், போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஞானசார தேரர் புலனாய்வுப்பிரிவுக்கு சொல்ல வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • March 26, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான மாணவ பட்டதாரிகளும் அரச வேலை கேட்டு போராட்டம்

  • March 26, 2025
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இன்று கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது ”இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் […]

இந்தியா

சென்னையில் தொடர் செயின் பறித்து வந்த கொள்ளையனை போட்டு தள்ளியது பொலிஸ்

  • March 26, 2025
  • 0 Comments

திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சென்னையில் ஒரே நாளில் நடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கசிப்பு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

உள்ளூர்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசரமாக அமெரிக்கா பயணமாகின்றார்

  • March 23, 2025
  • 0 Comments

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு செல்கின்றார். இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ உள்ளிட்டவர்களை சந்தித்து பரஸ்பர கலந்துரையாடல்களில் அமைச்சர் விஜித ஹேரத் ஈடுப்பட உள்ளதுடன் அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி […]

உள்ளூர்

கிளிநொச்சி பரந்தன் வீடொன்றில் கெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு மூவர் கைது

  • March 22, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5கிறாம் 75மில்லிக்கிறாம் கெறோயின் என்பன கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர். கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ள

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது யாழில் நீண்ட நாட்களுக்குப் […]

உள்ளூர்

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது

  • March 21, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய நாளை சனிக்கிழமை (22) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80 000க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக செலவுகளும் அதிகமாகவே காணப்படும். அதேவேளை வேட்பாளர்கள் செலவிடக் கூடிய […]

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]