முக்கிய செய்திகள்

யாழ் இணுவில் பகுதியில் தாயின் முன்னிலையில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல் தலைமறைவு பொலிஸார் அசமந்தம்

  • February 19, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார். இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் […]

முக்கிய செய்திகள்

தேர்தல் காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசியவர்கள் இப்போது அதனை கிடப்பில் போட்டுள்ளதாக சிறிதரன் எம்பி குற்றச்சாட்டு

  • February 19, 2025
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு இன முரண்பாட்டுக்கு சமஸ்டி சிறந்த தீர்வு என்று குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025) […]

முக்கிய செய்திகள்

மலையக்திற்கு ஒதுக்கியது போன்று யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அதின நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டுமென மஸ்தான் எம்.பி கோரிக்கை

  • February 19, 2025
  • 0 Comments

அதற்கான முறையான செயற்றிட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025 ) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு – செலவு திட்டம் மக்களை ஓரளவேனும் வாழவைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே காண்கிறோம். குறிப்பாக மலையக […]

முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும்

  • February 18, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸ பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ஷ 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

ஜேவிபியும் முன்னர் தேர்தலை பிற்போட ஆதரவளித்துள்ள கட்சி தான் என்கிறார் நாமல் ராஜபகஸ

  • February 18, 2025
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு எஸ்.சிறிதரன் எம்பி வேண்டுகோள்

  • February 18, 2025
  • 0 Comments

நியாயமான காரணிகளை கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கு சிறந்ததாக அமையும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் விசேட ஒதுக்கீடு […]

முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் – செஹான் சேமசிங்க

  • February 17, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடாக அமைய கூடாது. மாறாக பொருளாதார மேம்பாட்டுக்கான பாதீடாக அமைய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் என முன்னாள் நிதி ,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,ன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் மணல் அகழ்வினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(15-02-2025 மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் […]

முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவுக்கும்; அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று இடம் பெற்றது

  • February 14, 2025
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.