முக்கிய செய்திகள்

கொழும்பில் அப்பாவி இளைஞனை கைது செய்த பொலிஸார் கொடுக்கும் புதிய விளக்கம்

  • March 31, 2025
  • 0 Comments

கொழும்பில் அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களும், பகிரப்படும் செய்திகளும் போலியானவை. குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் அவர் கடும்போக்குவாதி என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (30) அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணிபுரியும் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது […]

உள்ளூர்

எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ

  • March 30, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது […]

உள்ளூர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் சாத்தியமென்கிறார் அஜித் பி. பெரேரா எம்.பி

  • March 29, 2025
  • 0 Comments

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள செய்தி சேவைக்கு நேற்று (28-03)வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • March 29, 2025
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜேவிபி அரசின் சாதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கேலிக்கூத்தாக மாற்றியது மட்டுமே- ஈபிடி.பி

  • March 27, 2025
  • 0 Comments

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன என தெரிவித்தார். ஆனால் இந் ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது என்றும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காலனித்துவ ஆட்சியில்இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கேட்காத பிரிட்டன் எனக்கெதிராக தடைகளை விதிப்பது விசித்திரம் – வசந்த கரனாகொட

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார். பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளை அழிக்குமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கே நானே கட்டளையிட்டேன்- மகிந்த விசேட அறிக்கை

  • March 27, 2025
  • 0 Comments

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டுப் போர் இடம்பெற்ற குறித்த காலத்தில் இலங்கையின் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாமே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்தத் தாமே முடிவு செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரிட்டனின் தடைக்குப் பின்னால் கனேடிய நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு

  • March 26, 2025
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதவியில் இல்லாவிட்டாலும் சுமந்திரன் கெத்து தான்,பிரித்தானிய பிரதிநிதி சுமந்திரனை சந்தித்தார்

  • March 25, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் தளபதிகளுக்கான பிரிட்டனின் தடையை கனடாவின் நீதியமைச்சரான ஹரி சங்கரி வரவேற்றுள்ளார்

  • March 25, 2025
  • 0 Comments

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் . இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை […]