உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்

  • September 14, 2025
  • 0 Comments

கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]

உள்ளூர்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கை கோர் குழு’ இலங்கைக்கு அழுத்தம்.

  • September 10, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • September 3, 2025
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. வடக்கு கடற்படை தளபதியின் கீழ் செயல்படும் ளுடுNளு கஞ்சதேவா முகாமினர் பெற்ற நம்பகமான தகவலின் அடிப்படையில், சம்பிலித்துறை கடற்கரையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, நான்கு மூட்டைகளில் மறைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் தெருமதிப்பு ரூபாய் 21 மில்லியனை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட […]

உள்ளூர்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந் மீட்கப்பட்ட பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

  • August 30, 2025
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அகழ்வாராய்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் கொக்குத்தொடுவாய் வழக்கு, முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

  • July 31, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]

உள்ளூர்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்- அருட்தந்தை சிறில் காமினி

  • July 29, 2025
  • 0 Comments

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ‘ […]

உள்ளூர்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு நடைப்பபெற்றது

  • July 28, 2025
  • 0 Comments

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் […]

உள்ளூர்

வடக்கில் 33 வைத்தியசாலைகள் செவிலியர்களின்றி இயங்குகுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • July 14, 2025
  • 0 Comments

வடமாகாணத்தில் உள்ள 33 முதன்மை வைத்தியசாலைகள் ஒரே ஒரு செவிலியருமின்றி இயங்கிவருகின்றன என சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா தெரிவித்தார். நாகதீப வைத்தியசாலையின் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், இவ்வகை வைத்தியசாலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை காலப்போக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அடுத்த இரண்டு மாதங்களில் 300 புதிய செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். மேலும், அதனைத் […]

உள்ளூர்

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

  • June 29, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே […]

உள்ளூர்

யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்

  • June 27, 2025
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.