உள்ளூர்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான […]

உள்ளூர்

மட்டக்களப்பில் பெண் மர்ம மரணம்

  • May 15, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

  • May 15, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய […]

உள்ளூர்

தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வவுனியாவில் சந்திப்பு

  • May 15, 2025
  • 0 Comments

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் […]

உள்ளூர்

பிரம்டன் இனப்படுகொலை நினைவகம் நிறுவியதால் நித்திரையிழந்த மகிந்தவின் புத்தா நாமல்

  • May 14, 2025
  • 0 Comments

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 4 சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

  • May 14, 2025
  • 0 Comments

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை […]

உள்ளூர்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர்

பொருளாதார போரை வெல்லவும் உலகின் போரை வெல்லவும் புத்தரின் மார்க்கத்தில் வழியுண்டு -எதிர்க்கட்சி தலைவர் சஜித்

  • May 12, 2025
  • 0 Comments

இலங்கையும், முழு உலகமும் இந்த நேரத்தில் பொருளாதார போரையும், அமைதி தொடர்பான சவாலையும் எதிர்கொண்டுள்ளன. இந்த சவால்களை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகள் உள்ளன என வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும்போது, பௌத்த தத்துவம் காட்டும் காரண-விளைவு அறத்தை நன்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆசை நாயகனை கூறிய ஆயுதத்தால் குத்திக்கொன்ற காதலி- கொழும்பில் சம்பவம்

  • May 12, 2025
  • 0 Comments

வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (11-05) பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் நபரொருவர் காயமடைந்த நிலையில், வீழ்ந்து கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மீட்டு, பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய […]

உள்ளூர்

வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சிக்கு பல தரப்புகளுடன் பேசுவதாக அரசாங்கம் தெரிவிப்பு

  • May 11, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆளும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வடக்கு கிழக்கு அரசியல் தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். நடைப்பெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]