முக்கிய செய்திகள்

கொழும்பில் அப்பாவி இளைஞனை கைது செய்த பொலிஸார் கொடுக்கும் புதிய விளக்கம்

  • March 31, 2025
  • 0 Comments

கொழும்பில் அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களும், பகிரப்படும் செய்திகளும் போலியானவை. குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் அவர் கடும்போக்குவாதி என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (30) அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணிபுரியும் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • March 29, 2025
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

உள்ளூர்

எங்களுடைய கைகளிலேயே ஆயுதங்கள் திணிக்கப்பட்டன என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

  • March 29, 2025
  • 0 Comments

ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜேவிபி அரசின் சாதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கேலிக்கூத்தாக மாற்றியது மட்டுமே- ஈபிடி.பி

  • March 27, 2025
  • 0 Comments

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன என தெரிவித்தார். ஆனால் இந் ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது என்றும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காலனித்துவ ஆட்சியில்இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கேட்காத பிரிட்டன் எனக்கெதிராக தடைகளை விதிப்பது விசித்திரம் – வசந்த கரனாகொட

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார். பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரிட்டனின் தடைக்குப் பின்னால் கனேடிய நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு

  • March 26, 2025
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் நேற்று மட்டும் 6 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

  • March 24, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் இடம்பெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 22 ஆம் திகதி எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. எனினும் 23 ஆம் திகதி நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அலுவிஹாரயிலிருந்து பலாபத்வல சந்தி வரையிலான வீதிகளில் வேட்பாளர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட […]

உள்ளூர்

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா ஆகியோரை பிரிட்டன் தடை செய்துள்ளது

  • March 24, 2025
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று ,லங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது யாழில் நீண்ட நாட்களுக்குப் […]