உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகள் 180 பதிவாகிய நிலையில் 133 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது

  • March 30, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 180 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 179 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஏனைய […]

உள்ளூர்

விடுதலை புலிகளின் ஆதரவாளனாக விமர்சித்த போதும் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை எடுக்கவில்லை -ரணில் விக்கிரமசிங்க

  • March 30, 2025
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மூவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய தீர்மானங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான ஆணைக்கழு ஒன்றை ஸ்தாபிக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தினால் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை – பெப்ரல் எச்சரிக்கை

  • March 30, 2025
  • 0 Comments

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். மாறாக ஏதேனுமொரு தரப்பினர் தேர்தல் சட்டங்களுக்கெதிராக செயற்பட்டால் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (29-03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறைத் தேர்தலிலும் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் […]

உள்ளூர்

எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ

  • March 30, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி தமிழரசுக் கட்சியை சந்திப்பாரா? பழைய பஞ்சாக்கத்துடன் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (28-03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு நடத்திய கும்பல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம், நேற்றிரவு (28-03) இடம்பெற்றுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் […]

உள்ளூர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார்

  • March 29, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார். இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விளக்கமறியல் 25 பேர் பிணையில் விடுதலை

  • March 28, 2025
  • 0 Comments

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபா வரை மடடுமே செலவிடலாம்

  • March 27, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரை செலவிடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.