உள்ளூர்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • November 23, 2024
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

  • October 31, 2024
  • 0 Comments

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என வியாபாரம் நடைபெறுகின்றது சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை காலையிலேயே விற்பனை ஆரம்பமாகியுள்ளது

உள்ளூர்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • October 28, 2024
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • October 26, 2024
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • October 22, 2024
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.