உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரணியில் பங்கேற்க போவதில்லையென அருண் சித்தார்த்தின் தலைவர் தெரிவிப்பு

  • November 3, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் அவரது கட்சியினர் பங்கேற்கவில்லை. காரணமாக, எதிர்க்கட்சிகளுக்கு எந்த நிலையான கொள்கைத் திட்டமும் இல்லாததால், அவர்கள் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பில் நேற்று (02-11) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு கொள்கைகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அவர்கள் இல்லாமல் இருப்பதையும், சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பை வழங்கப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். திலித் ஜயவீரின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • September 11, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

  • July 31, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை […]

உள்ளூர்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்- அருட்தந்தை சிறில் காமினி

  • July 29, 2025
  • 0 Comments

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ‘ […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் பட்டப்பகலில் முகமூடியுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் தங்கச்சங்கிலியுடன் தப்பியோட்டம்

  • July 24, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் வீதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் முகமூடியுடன் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த வேளை, வீட்டின் பின்புற வேலியின் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. திருடன், ஆசிரியையின் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் பறிக்க முயன்றுள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலுக்கு பரப்புவதற்கு மணல் இல்லை.

  • July 24, 2025
  • 0 Comments

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சரித்திரப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அடியவர்களின் நலனுக்காக வீதிகளில் மணல் பரப்புவது வழமையாகும் என கூறியுள்ளார். ஆனால், […]

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]