உள்ளூர் முக்கிய செய்திகள்

1,400 பில்லியன் ரூபாவினை பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்மாறு அரசாங்க அதிபர்களை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

  • February 28, 2025
  • 0 Comments

1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27-02-2025) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3மூ – 4மூ ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய […]

உலகம் கனடா

அமெரிக்காவில் இருந்து மேலும் 65 பேர் கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

  • February 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 65 பேர் | 65 ஆழசந Pநழிடந னுநிழசவநன குசழஅ வுhந ருnவைநன ளுவயவநள இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

4 ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, செலவுட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார். இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர். இதற்கு 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. பதவிக்கான சிறப்பு சலுகையின் சுமையை மக்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை இதுவே அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்ப மாற்றமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இருப்பினும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கள்ள மணல் அள்ளிய இருவர் கைது

  • February 27, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று (26-02-2025 ) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மேலும், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

உக்ரைனுக்கு செய்த ஆயூத உதவிக்கு பதிலாக அமெரிக்காவுக்கு கனிமவளத்தை தாரை வளர்க்கின்றார் ஜெலன்ஸ்கி

  • February 27, 2025
  • 0 Comments

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய ஜனாதிபதி; புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் சந்தித்துள்ளார்

  • February 26, 2025
  • 0 Comments

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ 5 மணிநேரத்தின் பின் சீ.ஐ.டியிலிருந்து வெளியேறினார்

  • February 26, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் யு-330 விமானங்கள் 6 மற்றும் யு- 350 விமானங்கள் 8 ஆகியவற்றை கொள்வனவு செய்தமைக்கான எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று) காலை 09.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகனின் மர்மமறியாது மரணித்த மற்றொரு அம்மா

  • February 26, 2025
  • 0 Comments

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த ‘மாரியம்மா’ என அழைக்கப்படும் வேலுசாமி மாரி, தனது 79ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24-02-2025) காலமானார். வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் இனி பயமின்றி சூதாடலாம்

  • February 25, 2025
  • 0 Comments

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தலுக்கு அதிகாரசபையை நிறுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தொழில்பாட்டு காலத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

  • February 25, 2025
  • 0 Comments

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கால வரையறையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கருத்திட்டக் கண்காணிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஒருங்கிணைப்புக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சீ.எச்.ஈ.சீ. துறைமுக நகர நிறுவனத்தை இணைப்புச் செய்வதற்கான பிரதான அலகாக, கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு இயங்கி வருகின்றது. இக்கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் 2027 ஜூன் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. […]