உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • December 6, 2024
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

உள்ளூர்

நெற்பயிரை காப்பாற்றுமாறு விவசாயிகள் போராட்டம்

  • December 5, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரியே விவசாயிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்  

உள்ளூர்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

  • December 3, 2024
  • 0 Comments

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. […]

இந்தியா

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • December 2, 2024
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

இந்தியா

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

  • December 2, 2024
  • 0 Comments

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சில மாவட்டங்களில் நேற்றிரவு வரை மழை நீடித்தது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய […]

உலகம்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த தயார்- ஜெலன்ஸ்கி

  • November 30, 2024
  • 0 Comments

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கின்றது சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தியது மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை […]

உள்ளூர்

ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட வடக்கை சேர்ந்த இளைஞர்கள்.

  • November 26, 2024
  • 0 Comments

இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் […]

உள்ளூர்

வெள்ள காடாக காட்சியளிக்கும் வடக்கு, கிழக்கு

  • November 26, 2024
  • 0 Comments

குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மத்திய – தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த […]

உள்ளூர்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • November 23, 2024
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

உலகம்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • November 9, 2024
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]