உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • February 21, 2025
  • 0 Comments

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (20-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் இயக்கச்சி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட […]

முக்கிய செய்திகள்

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • February 20, 2025
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

  • February 20, 2025
  • 0 Comments

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாகப் பாகங்கள் கலக்கப்பட்டவையாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்ரர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

  • February 20, 2025
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ‘இரத்நாயக்க வீரகோன் அரோஸன் மதுஸங்க’ என்பவரும் மொரட்டுவை […]

முக்கிய செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்து என எவ்வாறு கூற முடியும்? என்ற கேள்விக்கு பதிலளிக்காத- அமைச்சர்

  • February 19, 2025
  • 0 Comments

திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது

  • February 19, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அன்றைய தினத்திலிருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்இ உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம்இ சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் […]

முக்கிய செய்திகள்

மலையக்திற்கு ஒதுக்கியது போன்று யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அதின நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டுமென மஸ்தான் எம்.பி கோரிக்கை

  • February 19, 2025
  • 0 Comments

அதற்கான முறையான செயற்றிட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (18-02-2025 ) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு – செலவு திட்டம் மக்களை ஓரளவேனும் வாழவைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே காண்கிறோம். குறிப்பாக மலையக […]

முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸ பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ஷ 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு மேலதிக நிதியை கோரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும் என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவுக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது […]

முக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • February 18, 2025
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல […]