முக்கிய செய்திகள்

கிளிநொச்சியின் உடனடி தேவையென சில விடங்களை குறிப்பிட்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

  • January 18, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு அதனை வெளியிட்டுள்ளார். அக் கடிதத்தில் இவ்வாறு உள்ளது கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்துவரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில் உடனடியாக செய்து கொடுக்கவேண்டிய விடயங்களை தங்களிடம் முன்வைக்கிறோம். 1. கிளிநொச்சியில் பரந்தன் சந்தி, டிப்போ சந்தி, கரடிபோக்கு […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பாரம்பரிய விவசாயிகள்

  • January 18, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில செல்வந்த விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அரசாங்க அதிபரின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டித்து விவசாயிகள் ,அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (17) முறைப்பாடு செய்துள்ளனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • January 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

முக்கிய செய்திகள்

மன்னார் இரட்டைக்கொலை சம்பவத்தின் சூத்திரதாரி வெளிநாட்டில் வசிக்கின்றார்

  • January 18, 2025
  • 0 Comments

மன்னாரில் இருவர் பலியான துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் நடத்pய விசாரணையின் போது தெரியவந்துள்ளது மாட்டுவண்டி சவாரியின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து பலி வாங்கும் நோக்கில் இந்தக்கொலை […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லையெனில் அவர்களை காணாமலாக்கியது யாரென? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

  • January 17, 2025
  • 0 Comments

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டது : முன்னாள் எம்பி சுமந்திரன்

  • January 16, 2025
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான […]

முக்கிய செய்திகள்

சிறீதரன் எம்.பி. ஸ்டாலினுடன் கதைத்து வடக்கு மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – யாழ். மீனவர் அமைப்பு

  • January 16, 2025
  • 0 Comments

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் !

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார். தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் யாழ் இந்திய துணைதூதுவருக்கு மகஜர் […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி சீனாவுடனான புதிய கொள்கைகளுடன் நாளை மறுதினம் சீனா செல்கிறார்

  • January 12, 2025
  • 0 Comments

ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (14) பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட அரச அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங், வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, சீன பதசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிழலக் குழுவின் தழலவர் ஜாஓ லெர்ஜி மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-CPJ

  • January 10, 2025
  • 0 Comments

இலங்கையை சேர்ந்த சுயாதீன தமிழ் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின்(CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna வியாழக்கிழமை அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். […]