முக்கிய செய்திகள்

யாழில் விபத்து வயோதிபர் உயிரிழப்பு

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் வட்டு க்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளார்

முக்கிய செய்திகள்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த குற்றவாளி ஞானசார தேரருக்கு 9 மாத சிறைதண்டனை

  • January 9, 2025
  • 0 Comments

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

  • January 8, 2025
  • 0 Comments

இன்று (08) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம் பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. {{CODE7}} இதையும் படியுங்கள்>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்கள் சட்டத்தரணிகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன – வடக்கு ஆளுநர்

  • January 8, 2025
  • 0 Comments

ஆலயங்கள் சமூகசேவைக்கு செலவு செய்வதைவிட வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன. புலம்பெயர் […]

முக்கிய செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • January 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுசன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை கொழும்பின் பல வீதிகளில் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

உரும்பிராயில் கூலித்தொழிலாளியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

  • January 7, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்றையதினம்(07-01-2025) உத்தரவிட்டது. கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். {{CODE3}} சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் […]

உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

  • January 7, 2025
  • 0 Comments

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • January 7, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • January 2, 2025
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

உள்ளூர்

கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!

  • January 1, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது. மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.   5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற […]