உலகம்

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ – 31 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றம்

  • January 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் சுடர்விட்டு எரிந்தது பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை […]

சினிமா

இயக்குனர் மிஸ்கின் அருவருக்கதக்கதாக மேடையில் பேசியதால் குமுறும் நெட்டிசன்கள்

  • January 21, 2025
  • 0 Comments

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘பாட்டல் ராதா.’ பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூபேஸ் ராஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஸான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. […]

உலகம் வினோத உலகம்

சீனாவின் இளையோர் AI செல்லப் பிராணிகளையே அதிகம் விரும்புகின்றார்கள்

  • January 21, 2025
  • 0 Comments

செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் சீன இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைவிட அவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திர செல்லப் பிராணிகளை தங்களுடன் வைத்துக்கொள்ள இளம் பருவத்தினர் அமிகம் ஆரவம் காட்டுகின்றனர் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளிடம் காணப்படும் குணாதிசயங்களை இந்த ரோபோட்கள் வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் அவற்றை வடிவமைத்திருப்பது இவற்றின் சிறப்பம்சம். மன அழுத்தங்களிலிருந்து விடுபட […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன

  • January 20, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் […]

முக்கிய செய்திகள்

– வடக்கில் காணாமல் போனவர்களினால் நாம் பாதிக்கப்ட்டதனைப் போல தெற்கிலும் சிங்கள தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக லீலாதேவி ஆனந்த நடராஜா ஜெனிவாவில் தெரிவிப்பு

  • January 17, 2025
  • 0 Comments

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு […]

முக்கிய செய்திகள்

நாட்டில் தொடரூந்து; சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளது

  • January 17, 2025
  • 0 Comments

தொடரூந்து; இயந்திர சாரதிகளின் பற்றாக்குறையினால் இன்று வெள்ளிக்கிழமை (17) பல தொடரூந்து; சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், 42 சாரதிகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தொடரூந்து; திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக 68 தொடரூந்து; இயந்திர சாரதிகள் தேவை. எனினும் தற்போது 42 பேர் மட்டுமே பணிக்கு உள்ளனர். இவர்களில் 27 பேர் சுகயீன விடுமுறையில் உள்ளதாகவும் மேலும் 12 பேர் இரண்டு சேவைகளில் தங்களை ஈடுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தொடரூந்து; சேவைகள் திணைக்களம் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ் சி.ஐ.டி.யில் ஆஜர்

  • January 17, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட விசுவமடு பெடியன்!

  • January 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்வைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் […]

முக்கிய செய்திகள்

பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார், சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவிரிப்பு

  • January 12, 2025
  • 0 Comments

கண்டி மாவட்டத்தின் கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதில் […]

முக்கிய செய்திகள்

சிறிதரன் எம்பி வாக்குகளை பெறுவதற்காக துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் குற்றச்சாட்டு

  • January 11, 2025
  • 0 Comments

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையினால் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்தபோது இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதான சுடரினை ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடரேற்றியதையடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து […]