உள்ளூர்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு உடன் மீளப் பெறவேண்டுமென ; கஜேந்திரகுமார் பிரேரணை சமர்ப்பித்துள்ளார்

  • May 20, 2025
  • 0 Comments

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரேரணையொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை அரசு கையகப்படுத்துதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 28.03.2025 திகதி இடப்பட்ட, 2430ஃ2025 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கருக்கும் […]

உள்ளூர்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆசை நாயகனை கூறிய ஆயுதத்தால் குத்திக்கொன்ற காதலி- கொழும்பில் சம்பவம்

  • May 12, 2025
  • 0 Comments

வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (11-05) பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் நபரொருவர் காயமடைந்த நிலையில், வீழ்ந்து கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மீட்டு, பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய […]

உள்ளூர்

காணாமல்போன உறவுகளின் போராட்டம் 3 ஆயிரம் நாட்களை கடக்கின்றது

  • May 7, 2025
  • 0 Comments

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூவாயிரம் நாட்களாகிவிட்ட நிலையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வின்றி போராட்டம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

  • May 6, 2025
  • 0 Comments

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன் இன்றும் ஆர்ப்பாட்டம்!

  • May 2, 2025
  • 0 Comments

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ‘தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு அமைதி’ என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பொது அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  

உள்ளூர்

நல்லை ஆதீன குருமுதல்வர் பரிபூரணம் அடைந்தார்

  • May 2, 2025
  • 0 Comments

இயற்கையெய்திய நல்லை ஆதீன குருமுதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர் பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன சுவாமியின் புகழுடல் இன்று காலை 6.15 அளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டுவரப்பட்டது யாழ்ப்பாணத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிற்பகல் 5 மணி அளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.      

உள்ளூர்

ஊடகவியலாளர்கள் தராகி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தலும் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டமும் இடம் பெற்றது

  • April 28, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான பொலிஸார் சீருடைகளுடன், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் குழு நியமனம்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதான குழுவின் கீழ் மேலும் பல குழுக்களை உருவாக்கியுள்ளோம் பிரதான குழு ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்கனவே ஆராய […]

உள்ளூர்

ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்டனர்

  • April 21, 2025
  • 0 Comments

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர். ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர். பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்க பொருத்தமற்ற […]