உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கெதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

  • February 26, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் பேராட்டம் சர்வதேச அவதானம் பெற்றுள்ளது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நேற்று (24-02-2025) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழிலிருந்து மாடுகள் கடத்த வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியுடன் ஒருவர்

  • February 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினர் நேற்று (24-02-2025) இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள் , மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜேவிபியின் ஆயூதக்கிளர்ச்சியின் போது செய்யப்பட்ட கொலைகளால் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

  • February 25, 2025
  • 0 Comments

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர திசநாயக்கவிற்கும் எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ணவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சரான தனது தந்தை 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 8 பேரை கொலை செய்தார் என தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ண தெரிவித்ததை தொடர்ந்து இந்த வாக்குவாதம் இடம்பெற்றது. எனது தந்தை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

  • February 25, 2025
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும்.வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் […]

இந்தியாவின் 13ஆவது திருத்தத்தையும் சீனாவின் இனப் பிராந்திய சுயாட்சியையும் இணைத்து தீர்வு காணலாம்- தயான் ஜயத்திலக்க

  • February 23, 2025
  • 0 Comments

இந்தோ-சீன இணைவின் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஆசியப் பிராந்திய முறைமையை கண்டறிய முடியும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்தார். சீனாவின் தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பான் யூ தலைமையிலான குழுவினரின் வருகை மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றை உருவாக்குவதில் இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் உயிரிழப்பு

  • February 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் கடந்த 20 ம் திகதி ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

  • February 21, 2025
  • 0 Comments

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொத்துரொட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

  • February 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

லண்டனில் யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

  • February 21, 2025
  • 0 Comments

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்ல […]